
டேராடூன்,
உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி மாவட்டம் பாலிகர் பகுதியில் இன்று மேகவெடிப்பு காரணமாக கனமழை பெய்தது. கனமழையால் அப்பகுதியில் உள்ள ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
அப்போது, ஆற்றின் அருகே கட்டப்பட்டு வந்த ஓட்டலில் கட்டிட வேலை செய்துவந்த 9 பேர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர். தகவலறிந்து விரைந்து வந்த மீட்புக்குழுவினர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டவர்களை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.