உத்தரகாண்டில் நிலநடுக்கம்: ரிக்டரில் 3.5 ஆக பதிவு

2 weeks ago 1

டேராடூன்,

உத்தரகாண்டில் உள்ள உத்தரகாஷி பகுதியில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 8.19 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

5 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 30.85 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 78.60 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் லேசாக அதிர்ந்தபோதும் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

EQ of M: 3.5, On: 24/01/2025 08:19:28 IST, Lat: 30.85 N, Long: 78.60 E, Depth: 5 Km, Location: Uttarkashi, Uttarakhand.
For more information Download the BhooKamp App https://t.co/5gCOtjdtw0 @DrJitendraSingh @OfficeOfDrJS @Ravi_MoES @Dr_Mishra1966 @ndmaindia pic.twitter.com/bo9exMOGKv

— National Center for Seismology (@NCS_Earthquake) January 24, 2025


Read Entire Article