உத்தர பிரதேசம்: கல்லூரியில் மர்மமான முறையில் உயிரிழந்த மருத்துவ மாணவர் - போலீஸ் விசாரணை

8 months ago 42

லக்னோ,

உத்தர பிரதேச மாநிலம் ஷாஜகான்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவக் கல்லூரியில் 2-ம் ஆண்டு எம்.பி.பி.எஸ். படித்து வந்த மாணவர் குஷக்ரா பிரதாப் சிங்(24). கோரக்பூர் பகுதியைச் சேர்ந்த இவர், கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்துள்ளார்.

இந்நிலையில், இன்று விடுதிக்கு பின்புறத்தில் மர்மமான முறையில் குஷக்ரா பிரதாப் சிங் உயிரிழந்து கிடந்துள்ளார். இது குறித்து தகவலறிந்து வந்த போலீசார், உயிரிழந்த மாணவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அவர் விடுதியின் மாடியில் இருந்து கீழே விழுந்திருக்கலாம் என்று சந்தேகிப்பதாகவும், இது கொலையா? அல்லது தற்கொலையா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். 

Read Entire Article