உதயநிதி துணை முதல்வராக பொறுப்பேற்பு பொட்டல்புதூரில் திமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

4 months ago 26

நெல்லை, அக்.5: தென்காசி மாவட்டம் கடையம் ஆழ்வார்குறிச்சி பொட்டல்புதூர் பகுதியில் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக பொறுப்பேற்றதை அடுத்து திமுகவினர் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். விழாவிற்கு மாவட்ட கவுன்சிலர் மைதீன்பீவி கோதர் மைதீன் தலைமை வகித்தார். கடையம் யூனியன் சேர்மன் செல்லம்மாள் முருகேசன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று இனிப்புகள் வழங்கினார். தமிழ்நாடு காங்கிரஸ் இளைஞரணி மாநில பொதுச்செயலாளர் கவுன்சிலர் மாரிகுமார், ஆழ்வார்குறிச்சி பேரூர் அவைத்தலைவர் அல்லாஹ்பிச்சை, பஞ்சாயத்து தலைவர்கள் தர்மபுரம்மடம் ஜன்னத் சதாம், ரவணசமுத்திரம் முகமது உசேன், பொட்டல்புதூர் கணேசன், மாவட்ட தொண்டர் அணி தலைவர் சைலப்பன், ரவணசமுத்திரம் சங்கிலி பூதத்தான், ஆழ்வார்குறிச்சி பேரூர் துணைச்செயலாளர் ஆர்.எஸ்.பாண்டியன், முன்னாள் துணைச்செயலாளர் அம்பேத்குமார் ரவி, மகேந்திரன், சிங்கக்குட்டி, சசி, சதீஷ்குமார், செல்வராஜ், அரவிந்த், கோபால், மகேஷ், வழக்கறிஞர் இசேந்திரன், மாலிக் நகர் காலித், கே.பி.என்.அமானுல்லா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post உதயநிதி துணை முதல்வராக பொறுப்பேற்பு பொட்டல்புதூரில் திமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article