உண்ணாவிரத போராட்டத்துக்கு அனுமதி தர சட்டத்தில் இடமில்லை: சாம்சங் ஊழியர் தொழிற்சங்க வழக்கில் ஐகோர்ட் கருத்து

6 months ago 20


சென்னை: உண்ணாவிரத போராட்டத்திற்கு அனுமதி வழங்க சட்டத்தில் அனுமதியில்லை என்று சாம்சங் ஊழியர் தொழிற்சங்க வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சாம்சங் நிறுவன ஊழியர்கள் தங்களது தொழிற்சங்கத்தை அங்கீகரிக்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, போராட்டம் நடத்திய 91 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். இந்த பணி நீக்கத்தை ரத்து செய்ய வலியுறுத்தி, உண்ணாவிரத போராட்டம் நடத்த அனுமதியளிக்குமாறு உத்தரவிடக் கோரி, காஞ்சிபுரம் மாவட்ட சிஐடியு செயலாளர் முத்துக்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதி பி.வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, உண்ணாவிரத போராட்டம் நடத்த அனுமதி வழங்க சட்டத்தில் அனுமதி இல்லை என்று நீதிபதி தெரிவித்தார். மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், முழக்கம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட அனுமதி அளிக்குமாறு கோரினார். இதையடுத்து, இந்த மனுவுக்கு பதிலளிக்குமாறு காவல்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை வரும் 21ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

The post உண்ணாவிரத போராட்டத்துக்கு அனுமதி தர சட்டத்தில் இடமில்லை: சாம்சங் ஊழியர் தொழிற்சங்க வழக்கில் ஐகோர்ட் கருத்து appeared first on Dinakaran.

Read Entire Article