மூடிக்கிடக்கும் கோயில்களை திறந்து, தினமும் ஒருகால பூஜையாவது நடத்த வேண்டும் என்று அறநிலைய துறைக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அலங்கியம் பகுதியில் 100 ஆண்டுகள் பழமையான திண்டீஸ்வரர், வீரராகவ விநாயகர் கோயில் உள்ளது. பூஜைகள் நடைபெறாமல் இந்த கோயில் பல ஆண்டுகளாக மூடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் பாலகிருஷ்ணன் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.