உடுமலை, ஜூன் 4: கலைஞரின் 102வது பிறந்தநாளை முன்னிட்டு, உடுமலை நகர திமுக சார்பாக மத்திய பஸ் நிலையம் அருகே கலைஞர் உருவச்சிலைக்கு நகர செயலாளர் வேலுச்சாமி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. காலையில் உழவர் சந்தையில் பொதுமக்களுக்கு இலவச காய்கறிகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து, முதியோர் இல்லத்தில் காலை உணவு வழங்கப்பட்டது. நகர இளைஞரணி சார்பில் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்களுக்கு ரொட்டி, பழங்கள் வழங்கப்பட்டது. மதியம் மத்திய பஸ் நிலையத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது, தொடர்ந்து ஏரிப்பாளையம் நகராட்சி பள்ளியில் குழந்தைகளுக்கு பேக், நோட் புத்தகங்கள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் தலைமை செயற்குழு உறுப்பினர் ஷியாம்பிராசத், தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் குமார், பாபு, ஒன்றிய செயலாளர்கள் ராஜமாணிக்கம், மெய்ஞான மூர்த்தி, கிரி, நகரமன்ற தலைவர் மத்தீன், துணை தலைவர் கலைராஜன், நகர நிர்வாகிகள் பழனிச்சாமி, வக்கீல் செந்தில்குமார், ரேணுகா, செந்தில்குமார், நகர இளைஞரணி அமைப்பாளர் அர்ஜூனன், நகரமன்ற உறுப்பினர்கள் ஆறுச்சாமி, ரீகன், ஜெயலட்சுமி, விஜயலட்சுமி, மும்தாஜ், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள், நகர இளைஞரணி துணை அமைப்பாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
The post உடுமலை நகர திமுக சார்பில் கலைஞர் பிறந்தநாள் விழா appeared first on Dinakaran.