உச்ச நீதிமன்றத்தில் நீதி தேவதைக்கு புதிய சிலை: சந்திரசூட் திறந்து வைத்தார்

6 months ago 27

புதுடெல்லி: உச்ச நீதிமன்றத்தில் புதிதாக வைக்கப்பட்டுள்ள நீதி தேவதை சிலையை தலைமை நீதிபதி சந்திரசூட் திறந்து வைத்தார். உச்ச நீதிமன்ற நூலகத்தில் பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் வைக்கப்பட்டுள்ள நீதி தேவதையின் சிலை இருக்கிறது. அந்த சிலையானது செல்வம், அதிகாரம், அந்தஸ்து ஆகியவற்றை பார்க்க முடியாது என்பதை உணர்த்தும் விதமாக கண்கள் கட்டப்பட்ட நிலையிலும், அதிகாரம் மற்றும் அநீதியை தண்டிக்கும் வகையில் கையில் வாளுடன், மற்றொரு கையில் தராசுடனும் இருந்தது. இந்த நிலையில், உச்சநீதிமன்ற நூலகத்தில் புதிய சிலையானது, கண்களைத் திறந்த நிலையில், இடது கையில் வாளுக்கு பதிலாக அரசியலமைப்பு சாசனத்துடன் நிறுவப்பட்டுள்ளது. இதனை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் நேற்று திறந்து வைத்தார்.

The post உச்ச நீதிமன்றத்தில் நீதி தேவதைக்கு புதிய சிலை: சந்திரசூட் திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Read Entire Article