உச்ச நீதிமன்றத்தின் 51-வது தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னா பதவியேற்பு..!!

7 months ago 23

டெல்லி: உச்ச நீதிமன்றத்தின் 51-வது தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னா பதவியேற்றார். குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் சஞ்சீவ் கன்னா பதவியேற்றுக் கொண்டார். நீதிபதி சஞ்சீவ் கன்னாவுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் ஓய்வு பெற்றதை அடுத்து புதிய தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னா பதவியேற்றார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னா 2025 மே 13 வரை பதவியில் நீடிப்பார்.

The post உச்ச நீதிமன்றத்தின் 51-வது தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னா பதவியேற்பு..!! appeared first on Dinakaran.

Read Entire Article