உச்ச நீதிமன்ற நீதிபதியாக கே.வினோத் சந்திரன் பதவியேற்றார்

2 weeks ago 5

புதுடெல்லி: உச்ச நீதிமன்ற நீதிபதியாக கேரளாவை சேர்ந்த கே.வினோத் சந்திரன் நேற்று பதவியேற்றுக்கொண்டார். கேரளாவை சேர்ந்தவர் நீதிபதி கே.வினோத்சந்திரன். தற்போது இவர் பீகார் மாநிலம் பாட்னா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்தார். கேரள உயர் நீதிமன்ற நீதிபதிகள் பட்டியலில் முதல் இடத்தில் இருந்த அவரை உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா தலைமையிலான கொலிஜியம் பரிந்துரை செய்தது.

இதை ஒன்றிய அரசு ஏற்றுக்கொண்டதை தொடர்ந்து இதற்கான அறிவிப்பை ஜனாதிபதி திரவுபதி முர்மு வெளியிட்டார். இதையடுத்து நேற்று கே.வினோத் சந்திரனை, உச்ச நீதிமன்ற நீதிபதியாக, தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

The post உச்ச நீதிமன்ற நீதிபதியாக கே.வினோத் சந்திரன் பதவியேற்றார் appeared first on Dinakaran.

Read Entire Article