சென்னை: உச்ச நீதிமன்ற உத்தரவின்படி ஜாமின் நிபந்தனைகளை மீறவில்லை என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். ஜாமினை ரத்துசெய்யக் கோரி அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் செந்தில் பாலாஜி பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளார். “எந்த சாட்சிகளையும் தொந்தரவு செய்யவில்லை. வழக்கில் சாட்சியாக இல்லாத ஒருவரால் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தனது ஜாமினை ரத்துசெய்யக் கோரி அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல” என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
The post உச்ச நீதிமன்ற உத்தரவின்படி ஜாமின் நிபந்தனைகளை மீறவில்லை: அமைச்சர் செந்தில் பாலாஜி appeared first on Dinakaran.