உசிலம்பட்டி அருகே ஜல்லிக்கட்டு போட்டி: 51 பேர் காயம்

1 week ago 3

மதுரை,

மதுரை மாவட்டம் எழுமலை அருகே எஸ்.பாப்பிநாயக்கன்பட்டி உள்ளது. .இந்த கிராமத்தில் அமைந்துள்ள காளியம்மன் கோவிலின் பங்குனி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது. போட்டியை உசிலம்பட்டி கோட்டாட்சியர் சண்முக வடிவேல் தொடங்கி வைத்தார். சுமார் 750 காளைகளும், 420 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்ட இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் மதுரை, தேனி, விருதுநகர், திண்டுக்கல், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து காளைகள் கொண்டு வரப்பட்டு அவிழ்க்கப்பட்டன

திமிலுடன் திமிறி வந்த காளைகளை வீரத்துடன் மாடுபிடி வீரர்கள் அடக்கினர்.போட்டியில் வெற்றி பெற்ற காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு கிராம கமிட்டியினர் சார்பில் பீரோ, கட்டில், சைக்கிள், அண்டா உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் பரிசாக வழங்கப்பட்டது.

இதில் ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் ராஜசேகர், உசிலம்பட்டி எம்.எல்.ஏ. அய்யப்பன் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ஆர்வத்துடன் போட்டியை கண்டு ரசித்தனர்.

இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் மாடு முட்டி 51 வீரர்கள் காயம் அடைந்தனர். இதில் 4 ேபர் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மற்றவர்கள் உசிலம்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர். உசிலம்பட்டி போலீஸ் துணை சூப்பிரண்டு சந்திரசேகரன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

 

Read Entire Article