கேலி சித்திரம் மூலம் அவதூறு பரப்பும் திமுகவுக்கு வரும் தேர்தலில் மக்கள் தக்க தண்டனை வழங்குவார்கள் என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கூறினார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது:
கீழடி அகழாய்வு குறித்து முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன் தெளிவாக விளக்கம் அளித்துள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் எனது தலைமையிலான அதிமுக அரசு, கீழடி அகழாய்வுக்காக மேற்கொண்ட நடவடிக்கைகளை முழுமையாக தெரிவித்துவிட்டோம். விரும்பும் தெய்வங்களை வழிபடுவது நமது உரிமை.