உக்ரைன் போர் தற்காலிக நிறுத்தம்; ரஷியா அறிவிப்பு

4 hours ago 1

மாஸ்கோ,

உக்ரைன், ரஷியா இடையேயான போர் இன்று 1 ஆயிரத்து 159வது நாளாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகள் முயற்சித்தன. ஆனால், அந்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்த நிலையில் போர் தொடர்ந்து நீடித்து வருகிறது.

இதனிடையே, கிறிஸ்தவ மதத்தினரின் முக்கிய நிகழ்வான ஈஸ்டர் பண்டிகை கடந்த 20ம் தேதி கொண்டாடப்பட்டது. அன்றைய தினம் மட்டும் தற்காலிக போர் நிறுத்தத்தை ரஷியா அமல்படுத்தியது. அதன்பின்னர், மீண்டும் போர் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதேவேளை, போர் நிறுத்தம் தொடர்பான அமைதி பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாகவும் ரஷிய அதிபர் புதின் அறிவித்தார்.

இந்நிலையில், உக்ரைன் போரை 3 நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்துவதாக ரஷியா அறிவித்துள்ளது. அதன்படி, அடுத்த மாதம் 8ம் தேதி முதல் 10ம் தேதி வரை 3 நாட்களுக்கு போரை தற்காலிமகாக நிறுத்துவதாக ரஷிய அதிபர் புதின் அறிவித்துள்ளார்.

இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வந்ததன் 80ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி உக்ரைன் போர் 3 நாட்கள் நிறுத்தப்படுகிறது. இரண்டாம் உலகப்போரின் முக்கிய போராக 'பெரும் தேசபக்தி போர்' பார்க்கப்படுகிறது. ஜெர்மனியை எதிர்த்து சோவியத் யூனியன் (ரஷியா) போரிட்டதே 'பெரும் தேசபக்தி போர்' என அழைக்கப்படுகிறது. அந்த போர் நிறைவடைந்த 80ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி உக்ரைன் போரை 3 நாட்கள் நிறுத்த புதின் ஒப்புதல் அளித்துள்ளார்.

3 நாட்கள் தற்காலிக போர் நிறுத்தம் தொடர்பான ரஷியாவின் அறிவிப்பிற்கு உக்ரைன் தரப்பில் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கப்படவில்லை

Read Entire Article