உத்தரப் பிரதேசம்: உ.பி.யில் 69,000 உதவி ஆசிரியர்கள் பணி நியமனத்தில் EWS இடஒதுக்கீடு கோரிய மனுவை தள்ளுபடி செய்து அலஹாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆட்கள் பணியமர்த்தப்பட்டதால் மாற்றம் செய்ய முடியாது என நீதிபதி திட்டவட்டமாக தெரிவித்தார். ஆட்சேர்க்கை அறிவிப்பில் EWS ஒதுக்கீடு தெரிவிக்கப்பட்டிருந்தாலும், விண்ணப்பிக்கும் போது யாரும் தங்களை EWS பிரிவினராக குறிப்பிடவில்லை. எனவே யார் இந்தப் பிரிவில் வருகிறார்கள் என்பதை இப்போது தீர்மானிப்பது கடினம் எனவும் நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.
The post உ.பி.யில் 69,000 உதவி ஆசிரியர்கள் பணி நியமனத்தில் EWS இடஒதுக்கீடு கோரிய மனு தள்ளுபடி: அலஹாபாத் உயர்நீதிமன்றம் appeared first on Dinakaran.