உத்திரப் பிரதேசம்: உ.பி. சட்டப்பேரவை வளாகத்தில் பான் மசாலா போட்டு மென்று துப்பினால் ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும் என சபாநாயகர் சதீஷ் மகான் உத்தரவிட்டுள்ளார். பேரவைக்குள் பான் மசாலாவை மென்று துப்புவதற்கு சபாநாயகர் நேற்று தடை விதித்தார். எம்.எல்.ஏ.க்கள் சிலர் பான் மசாலாவை மென்று தின்றுவிட்டு சட்டப்பேரவையிலேயே துப்பிவிடுகின்றனர். எம்.எல்.ஏ.க்கள் பான் மசாலாவை துப்புவதால் சட்டப்பேரவை அசுத்தமாகி தூய்மைப்படுத்த முடியவில்லை என புகார் எழுந்துள்ளது.
The post உ.பி. சட்டப்பேரவை: பான் மசாலா மென்று துப்பினால் அபராதம்! appeared first on Dinakaran.