ஈரோட்டில் யானை தாக்கி முதியவர் பலி

8 hours ago 3

ஈரோடு,

ஈரோட்டை சேர்ந்த கணேசன் (வயது 70) என்பவர் அந்தியூர் அருகே நேற்று தனது ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துக்கொண்டு வனப்பகுதிக்கு சென்றார். அப்போது வனப்பகுதிக்குள் இருந்து வந்த ஒற்றை யானை திடீரென முதியவரை தாக்க தொடக்கியது.

இதனால் பலத்த காயமடைந்த முதியவர் வலி தாங்க முடியாமல் கத்தினார். இதனையடுத்து அருகில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த மற்றொரு நபர் சத்தம் கேட்டு சம்பவ இடத்திற்கு விரைந்தார்.பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்த கணேசனை பார்த்து அந்த நபர் அதிர்ச்சியடைந்தார். இதனையடுத்து முதியவர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதியவர் இன்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். யானை தாக்கி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Read Entire Article