சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் அலைதான் தமிழகம் முழுவதும் வீசுகிறது என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார். தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது: நடந்து முடிந்த ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல், மக்கள் நலனுக்காக அனுதினமும் உழைத்து வரும் முதல்வரின் உழைப்பிற்கும், திராவிட மாடல் அரசுக்கும், பெரியாரை இகழ்ந்து அரசியல் செய்ய நினைத்த அற்ப பதர்களை ஓடவிட்ட தமிழ்நாட்டு மக்களுக்கும் கிடைத்த மாபெரும் வெற்றியாகும்.
குரங்கு கையில் சிக்கிய பூமாலையாய் தன் கைக்கு கிடைத்த கட்சியை சீரழித்து சின்னாபின்னமாக்கி தோல்வி மேல் தோல்வி கண்டு தோல்விசாமியோ, இல்லாத பொய்களை வீசுவதே அன்றாட அலுவலாக வைத்திருக்கிறார். அதனால்தான் மக்களை சந்திக்க முடியாமலும் திமுகவை எதிர்க்க துணிவில்லாமலும் தேர்தலை சந்திக்காமல் ஓடி ஒளிந்துக் கொண்டார். வாக்களித்த மக்களுக்கு மட்டுமல்லாமல் வாக்களிக்காத மக்களின் நலனுக்காகவும் இந்த அரசு பாடுபடும் என அறிவித்து செயல்பட்டார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.
அதன் காரணமாக ஈரோடு கிழக்கில் அதிமுக வாக்குகள் அனைத்தும் திமுகவிற்கு வந்துள்ளது. தமிழ்நாடு முழுக்க திமுகவிற்கு ஆதரவான சூழலே நிலவுகிறது. ஆட்சிக்கு ஆதரவான குரலே எங்கும் எதிரொலிக்கிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் அலை தான் தமிழ்நாடு முழுக்க அடித்துக் கொண்டிருகிறது. இது 2026 தேர்தலிலும் எதிரொலிக்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். கைக்கு கிடைத்த கட்சியை சீரழித்து சின்னாபின்னமாக்கி தோல்வி மேல் தோல்வி கண்டு தோல்வி சாமியோ, இல்லாத பொய்களை வீசுவதே அன்றாட அலுவலாக வைத்திருக்கிறார்.
The post ஈரோட்டில் அதிமுக வாக்குகளும் திமுகவுக்கே வந்துள்ளது முதல்வர் மு.க.ஸ்டாலின் அலை தமிழ்நாடு முழுவதும் வீசுகிறது: அமைச்சர் செந்தில் பாலாஜி எக்ஸ் தள பதிவு appeared first on Dinakaran.