ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் ரூ.900 கோடியில் தொழிற்சாலையை விரிவாக்கம் செய்கிறது மில்கி மிஸ்ட் நிறுவனம்

3 months ago 10

சென்னை: ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் ரூ.900 கோடியில் தொழிற்சாலையை மில்கி மிஸ்ட் நிறுவனம் விரிவாக்கம் செய்கிறது. ரூ.1,777 கோடி முதலீட்டிற்கு தமிழ்நாடு அமைச்சரவை ஒப்புதல் அளித்த நிலையில் முதல் கட்டமாக ரூ.900 கோடி முதலீடு செய்கிறது. பெருந்துறையில் உள்ள தொழிற்சாலையை 2.26 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவில் விரிவாக்கம் செய்ய மில்கி மிஸ்ட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மில்கி மிஸ்ட் ஆலை விரிவாக்கத்தினால் கூடுதலாக 450 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

The post ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் ரூ.900 கோடியில் தொழிற்சாலையை விரிவாக்கம் செய்கிறது மில்கி மிஸ்ட் நிறுவனம் appeared first on Dinakaran.

Read Entire Article