சென்னை: ஈரோடு, திருப்பூர், விழுப்புரம், மதுரை ஆகிய மாவட்டங்களுக்கு திமுக மாவட்ட பொறுப்பாளர்களை நியமித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி மாவட்டப் பொறுப்பாளராக அப்துல் வகாப் நியமிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கை: கட்சியின் நிர்வாக வசதிக்காகவும், கட்சிப் பணிகள் செம்மையுற நடைபெற்றிடவும் ஈரோடு, திருப்பூர், விழுப்புரம், மதுரை ஆகிய மாவட்டங்களில் உள்ள சட்டமன்ற தொகுதிகள் மாற்றியமைக்கப்படுகிறது. அதோடு சில மாவட்டங்களுக்கு பின்வருமாறு புதிதாக பொறுப்பாளர்களும் நியமிக்கப்படுகிறார்கள்.