சென்னை / ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் அக்கட்சியின் கொள்கை பரப்பு இணை செயலாளர் வி.சி.சந்திரகுமார் போட்டியிடுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இத்தேர்தல் சுதந்திரமாக, நியாயமாக நடைபெறும் என்ற நம்பிக்கை இல்லாததால் இதை புறக்கணிப்பதாக அதிமுக, தேமுதிக அறிவித்துள்ளன.
கடந்த 2021 சட்டப்பேரவை தேர்தலில், ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட திருமகன் ஈவெரா வெற்றி பெற்றார். அவர் காலமானதால். 2003-ல் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. காங்கிரஸ் மூத்த தலைவரும், திருமகன் ஈவெராவின் தந்தையுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி பெற்றார். உடல்நலக் குறைவால் அவர் கடந்த டிசம்பர் 14-ம் தேதி காலமானதை அடுத்து. இக்கொகுதிக்கு மீண்டும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 5-ம் தேதி வாக்குப்பதிவு, 8-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.