ஈரோடு: தொகுதி மறுசீரமைப்புக்கு பிறகு, ஈரோடு கிழக்கு தொகுதியில் முதன்முறையாக திமுக வெற்றி பெற்றுள்ளது. அக்கட்சியின் வேட்பாளராக போட்டியிட்ட வி.சி.சந்திரகுமார், இதுவரை இல்லாத அளவு அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது திமுக வட்டாரத்தில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பவானிசாகர் அணை உருவாக காரணமாக விளங்கிய தியாகி ஈஸ்வரனில் தொடங்கி, 1951-ம் ஆண்டு தொகுதி சீரமைப்பிற்கு பின் இந்திய பொதுவுடமைக்கட்சியின் ராஜூ, காங்கிரஸ் வி.எஸ்.மாணிக்கசுந்தரம், ஏ.எஸ்.தட்சிணாமூர்த்தி ஆகியோர் ஈரோடு சட்டப்பேரவைத் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளனர்.