ஈரோடு: ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பலி

5 hours ago 1

ஈரோடு,

ஈரோடு மாவட்டம் மகுடஞ்சாவடி ரெயில் நிலையத்துக்கும், வீரபாண்டி ரெயில் நிலையத்துக்கும் இடைப்பட்ட தண்டவாள பகுதியில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்து கிடப்பதாக ஈரோடு ரெயில்வே போலீசாருக்கு நேற்று முன்தினம் தகவல் வந்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, இறந்து கிடந்தவரின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் விசாரணையில் இறந்தவர், கள்ளக்குறிச்சி மாவட்டம் ஏமாப்பூரை சேர்ந்த டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி வெங்கடேசன் (வயது 50) என்பதும், ரெயிலில் பயணம் செய்தபோது, படிக்கட்டில் இருந்து தவறி கீழே விழுந்து இறந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து ஈரோடு ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Read Entire Article