ஈரோடு அருகே அரசு பள்ளி ஆசிரியர் மாரடைப்பால் மரணம்: வகுப்பறையிலே உயிர் பிரிந்த சோகம்

2 months ago 10

ஈரோடு: ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே, அரசுப் பள்ளியில் மாணவர்களுக்கு பாடம் எடுத்துக் கொண்டிருந்த ஆசிரியர், மாரடைப்பில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலைப்பகுதி, சுண்டப்பூர் மலை கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணிபுரிந்து வந்தவர் அந்தோணி ஜெரால்ட் (49). புதன்கிழமை காலை பள்ளிக்கு வந்து வகுப்பு எடுத்த ஆசிரியர் அந்தோணி ஜெரால்ட், மதிய உணவு அருந்தியுள்ளார். அதன் பின், தொடர்ச்சியாக மாணவர்களுக்கு வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டு இருந்த போது, அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்துள்ளார். அப்போது அவருக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது. அங்கிருந்த ஆசிரியர்கள், கார் மூலம் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

Read Entire Article