இஸ்ரேல் அரசைக் கண்டித்து தஞ்சாவூரில் போராட்டம்

3 months ago 15

 

தஞ்சாவூர், அக. 22: தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு மாவட்டப் பொருளாளர் அப்துல் நசீர் தலைமை வகித்தார். சிறுபான்மை மக்கள் நலக்குழு மாநிலச் செயலாளர் செந்தில்குமார், மாவட்டச் செயலாளர் குருசாமி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்டச் செயலாளர் ஜெயினுலாபுதீன், மனிதநேய மக்கள் கட்சி மாநில செயலாளர் பாதுஷா, மனிதநேய மக்கள் கட்சி மாவட்டச் செயலாளர் வல்லம் ரியாஸ், பாம்பாட்டி தெரு பள்ளிவாசல் தலைவர் ஹாஜா நஜிமுதீன், மன்சூர் தைக்கால் பள்ளிவாசல் தலைவர் சையது அல்லா பாக்ஸ், சையது அலி பாஷா தெரு பள்ளிவாசல் செயலாளர் எஸ்.இம்தியாஸ் அகமத், இடதுசாரிகள் பொது மேடை ஒருங்கிணைப்பாளர் துரை.மதிவாணன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

போர் எதிர்ப்பு முழக்கப் போராட்டத்தில் இஸ்ரேல் அரசு உடனடியாக போரை நிறுத்த வேண்டும். இஸ்ரேல் நடத்தும் போருக்கு அமெரிக்க அரசு துணை போகக்கூடாது. அப்பாவி மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. மாநகர செயலாளர் கோஸ் கனி நன்றி கூறினார்.

The post இஸ்ரேல் அரசைக் கண்டித்து தஞ்சாவூரில் போராட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article