இவ்வாண்டு 40 நாட்களுக்குள் 77 முறை இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது : மக்களவையில் திமுக எம்.பி. டி.ஆர்.பாலு பேச்சு

5 hours ago 3

டெல்லி : இலங்கை கடற்படையால் தமிழ்நாடு மீனவர்கள் கைது செய்யப்படும் விவகாரத்தை எழுப்பி மக்களவையில் திமுக எம்.பி. டி.ஆர்.பாலு பேசி வருகிறார். அவர் ஆற்றிய உரையில், “இலங்கை கடற்படையினர் இந்திய எல்லைக்குள் வந்து மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியிருக்கிறார்கள். தமிழ்நாடு மீனவர்கள், இலங்கை கடற்படையால் தொடர்ந்து கைது செய்யப்படுகின்றனர். 2024-ல் 528 முறை தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கை படையால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவ்வாண்டு 40 நாட்களுக்குள் 77 முறை மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைதாகி உள்ளனர்.

தமிழ்நாட்டு மீனவர்கள் தாக்கப்படுவதை தடுக்கக் கோரி வெளியுறவு அமைச்சருக்கு முதல்வர் கடிதம் எழுதியுள்ளார். இவ்வாண்டு இதுவரை 37 மீனவர்களை இலங்கை கடற்படை கைதுசெய்துள்ளது;-216 விசைப்படகுகள் இலங்கை வசம் உள்ளன. அரசால் பிரச்சனையை தீர்க்க முடியவில்லை என்றால் இருநாட்டு மீனவர்களும் பேசித் தீர்க்க அனுமதியுங்கள். தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தொடர்ந்து கைது செய்யப்படுவதை தடுக்க நிரந்தர தீர்வு வேண்டும். மீனவர்கள் கைது செய்யப்படும் சம்பவங்களை ஒன்றிய அரசு உடனே தடுத்து நிறுத்த வேண்டும், “இவ்வாறு தெரிவித்தார்.

The post இவ்வாண்டு 40 நாட்களுக்குள் 77 முறை இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது : மக்களவையில் திமுக எம்.பி. டி.ஆர்.பாலு பேச்சு appeared first on Dinakaran.

Read Entire Article