இழுவைகள், மீட்பு கப்பல் டெண்டர் முறைகேடு: சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 4 இடங்களில் சிபிஐ சோதனை

3 months ago 18

சென்னை: சென்னை துறைமுகத்தில் கழிவு செய்யப்பட்ட இழுவைகள், எண்ணெய் மீட்பு கப்பல் டெண்டர் முறைகேடு வழக்கில் சென்னை உள்ளிட்ட 4 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ.27 லட்சம் பணம், முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளன. சென்னை துறைமுகத்தில் கடந்த 2019 மற்றும் 2020-ம் ஆண்டில் கழிவு செய்யப்பட்ட 4 இழுவைகள் மற்றும் ‘அன்னம்’ என்ற எண்ணெய் மீட்பு கப்பல் ஆகியவற்றுக்கு டெண்டர் கோரப்பட்டிருந்தது.

இந்த டெண்டரைகுறிப்பிட்ட சிலருக்கு வழங்குவதற்காக, அப்போதைய துறைமுக போக்குவரத்து முதுநிலை துணை இயக்குநராக இருந்த புகழேந்தி, ஒப்பந்ததாரர்களிடம் ரூ.70 லட்சம் லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, துறைமுக லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரி முரளி கிருஷ்ணன் கொடுத்தபுகாரின் அடிப்படையில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

Read Entire Article