இளம்பெண்கள் திடீர் மாயம்

6 months ago 23

 

மதுரை, ஆத்திகுளம் ஏஞ்சல் நகரை சேர்ந்தவர் பழனியப்பன். கார் டிரைவரான இவரது மனைவி வைதேகி (33). இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். வைதேகி அப்பகுதியிலுள்ள பியூட்டி பார்லரில் பணிபுரிந்நு வந்தார். இந்நிலையில், சம்பவத்தன்று வேலைக்கு செல்வதாக கணவரிடம் கூறிவிட்டு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து பழனியப்பன் அளித்த புகாரின் பேரில், தல்லாகுளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

இதேபோல் மதுரை, சிந்தாமணியை சேர்ந்தவர் வெங்கடசுப்பு(44). இவரது மனைவி வசந்தி(34). இவர்கள் 2009ல் காதல் திருமணம் செய்து கொண்டனர். இரு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டில் இருந்து வெளியே சென்ற வசந்தி மாயமானார். பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியாமல் போனதால், இதுகுறித்து கீரைத்துறை போலீசில் வெங்கடசுப்பு புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post இளம்பெண்கள் திடீர் மாயம் appeared first on Dinakaran.

Read Entire Article