இலங்கையைச் சேர்ந்தவர்கள் அட்டகாசம்: செருதூர் மீனவர்களை தாக்கி வலை, மீன்பிடி கருவிகள் கொள்ளை

4 months ago 26

நாகப்பட்டினம்: நேற்று முன் தினம் (அக்.8) நாகை மாவட்டம் வெள்ளப்பள்ளம் மற்றும் புஷ்பவனம் மீனவர்களின் வலைகளை அறுத்தும் பறித்தும் சென்ற இலங்கையைச் சேர்ந்தவர்கள் நேற்று (அக்.9) இரவு செருதூர் மீனவர்களின் வலைகளை பறித்துச் சென்றுள்ள சம்பவம் மீனவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

செருதூர் மீனவ கிராமத்திலிருந்து கடந்த 8-ம் தேதி காலை, சத்தியசீலன் (50) என்பவருக்குச் சொந்தமான ஃபைபர் படகில் செருதூர் சுனாமி குடியிருப்பைச் சேர்ந்த விஜயன் (31), ரமணன் (22), விக்னேஷ் குமார் ( 21), ரீகன் (21) ஆகிய நால்வரும் மீன் பிடிக்க கடலுக்குச் சென்றனர். 9-ம் தேதி இரவு ஏழு மணி அளவில் கோடியக்கரையில் இருந்து தென்கிழக்கே 15 நாட்டிகல் கடல் மைல் தூரத்தில் அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

Read Entire Article