காலே: இலங்கை கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் திமுத் கருணாரத்னே 100வது டெஸ்ட் போட்டி முடிவில் ஓய்வு பெறப் போவதாக அறிவித்துள்ளார். இலங்கையின் காலே நகரில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக நாளை நடக்கும் டெஸ்ட் போட்டி, கருணாரத்னேவுக்கு 100வது டெஸ்டாக அமைந்துள்ளது. அந்த போட்டிக்கு பின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அவர் அறிவித்துள்ளார். அவரது முதல் டெஸ்ட் போட்டியும் காலே நகரில் நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.
The post இலங்கை முன்னாள் கேப்டன் கருணாரத்னே ஓய்வு appeared first on Dinakaran.