இலங்கை கடற்படை சிறை பிடிப்பதை தடுக்கவேண்டும்: ஒன்றிய அமைச்சரிடம் தமிழக மீனவர்கள் குழு கோரிக்கை

3 days ago 1

ராமநாதபுரம்: இலங்கை கடற்படை சிறைபிடிப்பதை தடுக்க வேண்டும் என்று ஒன்றிய அமைச்சரிடம் தமிழக மீனவர்கள் குழு கோரிக்கை மனு அளித்தனர். தமிழக மீனவர் குழு ஒன்றிய மீன்வளத்துறை அமைச்சர் ராஜிவ் ரஞ்சன் சிங்கை நேற்று டெல்லியில் சந்தித்து இந்திய – இலங்கை மீன்பிடி பிரச்னைகளுக்கு தீர்வுகள் குறித்து கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து ராமேஸ்வரம் தேசிய பாரம்பரிய மீனவர் கூட்டமைப்பு தலைவர் நல்லதம்பி கூறுகையில், ஒன்றிய அமைச்சரை சந்தித்து தமிழக மீனவர்கள் பிரச்னை குறித்து கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அதில் முக்கியமாக 1974 ஆண்டு முதல் 50 வருடங்களாக பாராம்பரிய கச்சதீவு பிரச்னையால் தமிழக மீனவர்கள் மீன்பிடி சார்ந்து பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர்.

கச்சத்தீவு மீன்பிடி பிரச்னை குறித்து ஒன்றிய அரசு, தமிழக அரசு மற்றும் மீனவர்கள் அடங்கிய முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இந்திய – இலங்கை மீனவர்கள் நல பேச்சுவார்த்தையை நடத்த வேண்டும். அப்போது பாக் ஜலசந்தி கடல் பகுதி மீனவர்கள் பிரச்னை மற்றும் இந்திய பெருங்கடல், வங்காள விரிகுடா மீனவர்கள் பிரச்னை என தனித்தனியாக பிரித்து பேச்சுவார்த்தை நடத்தி பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும். கச்சத்தீவு அமைந்துள்ள பாக் ஜலசந்தி கடல் பகுதிக்கு தனி மீன்பிடி மேலாண்மை சட்டம் உருவாக்கப்பட வேண்டும். இந்திய அரசு இலங்கை அரசுடன் பேசி, மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடிப்பது மற்றும் இலங்கை நீதிமன்றம் தண்டிப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தோம்.இவ்வாறு தெரிவித்தார்.

The post இலங்கை கடற்படை சிறை பிடிப்பதை தடுக்கவேண்டும்: ஒன்றிய அமைச்சரிடம் தமிழக மீனவர்கள் குழு கோரிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article