இலங்கை அரசிடம் பேச்சுவார்த்தை நடத்த ஒன்றிய அரசை வலியுறுத்தி காரைக்கால் மீனவர்கள் 7-வது நாளாக வேலை நிறுத்தம்

1 week ago 6

புதுச்சேரி: இலங்கை கடற்படை காரைக்கால் மாவட்டத்தை சேர்ந்த 13 மீனவர்களை துப்பாக்கி சூடு நடத்தி கைது செய்தது. இதனை கண்டித்து காரைக்கால் மீனவர்கள் ஒருவார காலமாக தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். கண்டன ஆர்ப்பாட்டம், கருப்பு கொடியை படகில் ஏற்றி ஆர்ப்பாட்டம் என அவர்களது போராட்டம் வடிவங்கள் நாளுக்கு நாள் மாறி வருகிறது.

இந்த நிலையில் இன்று பிற்பகல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மீனவர்களுடன் புதுச்சேரி மீன்வளத்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சூழலில் கடந்த ஒரு வாரமாக மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் மீனவர்கள் மட்டுமின்றி, ஐஸ் விற்பனையாளர்கள், சுமை தூக்குபவர்கள் என மீன்பிடி தொழில்சார்ந்த பல்லாயிர கணக்கானோர் வாழ்வாதாரம் இன்றி வீட்டிலேயே முடங்கியுள்ளனர்.

அது மட்டுமின்றி நாள் ஒன்றுக்கு சுமார் ரூ.1கோடி அளவிற்கு மீன் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை உடனடியாக் விடுதலை செய்ய வேண்டும் எனவும், அதற்கு ஒன்றிய அரசு உரிய பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனவும் காரைக்கால் மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post இலங்கை அரசிடம் பேச்சுவார்த்தை நடத்த ஒன்றிய அரசை வலியுறுத்தி காரைக்கால் மீனவர்கள் 7-வது நாளாக வேலை நிறுத்தம் appeared first on Dinakaran.

Read Entire Article