சென்னை : இலங்கை அரசால் நாட்டுடைமை ஆக்கப்பட்ட தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மீனவர்களின் படகுகளை ஏலம் விட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2020ல் பறிமுதல் செய்த படகுகள் ஏலம் விடப்பட்ட நிலையில், 2024ல் பிடிக்கப்பட்ட படகுகளை ஏலம் விடப்போவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ராமேஸ்வரம் படகுகள் 31, புதுக்கோட்டை படகுகள் 14, கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த மீனவர்களின் 6 படகுகள், நாகை படகுகள் 3, காரைக்கால் மாவட்ட படகுகள் 5 என 67 படகுகளின் பட்டியலை இலங்கை நீரியல் வளத்துறை வெளியிட்டுள்ளது.
The post இலங்கை அரசால் நாட்டுடைமை ஆக்கப்பட்ட தமிழ்நாடு, புதுச்சேரி மீனவர்களின் படகுகளை ஏலம் விட நடவடிக்கை!! appeared first on Dinakaran.