இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணி 414 ரன்களுக்கு ஆட்டமிழப்பு

3 hours ago 2

காலே,

இலங்கை - ஆஸ்திரேலியா இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி காலே மைதானத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இலங்கை பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி பேட்டிங் செய்த இலங்கை தனது முதல் இன்னிங்சில் 257 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இலங்கை தரப்பில் அதிகபட்சமாக குசல் மெண்டிஸ் 85 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலியா தரப்பில் மிட்செல் ஸ்டார்க், குனமென், நாதன் லயன் ஆகியோர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு ஸ்டீவ் சுமித் மற்றும் விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி சதமடித்து அசத்தினர்.

இதன் மூலம் ஆஸ்திரேலியா 2ம் நாள் முடிவில் 80 ஓவர்களில் 3 விக்கெட்டை மட்டும் இழந்து 330 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலியா தற்போது வரை 73 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. அலெக்ஸ் கேரி 139 ரன்களுடனும், ஸ்டீவ் ஸ்மித் 120 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இன்று 3வது நாள் ஆட்டம் நடைபெற்றது. தொடர்ந்து அலெக்ஸ் , ஸ்மித் நிலைத்து ஆடினர். ஸ்மித் 131 ரன்களும், அலெக்ஸ் கேரி 156 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர் . பின்னர் வந்த வீரர்களும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர் .

இதனால் ஆஸ்திரலிய அணி 414 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஆஸ்திரேலிய அணி 157 ரன்கள் முன்னிலை பெற்றது. இலங்கை அணி சார்பில் பிரபாத் ஜெயசூர்யா 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். தொடர்ந்து இலங்கை அணி 2வது இன்னிங்சில் விளையாடுகிறது. 

Read Entire Article