திருத்தணி, ஜன. 12: பொதட்டூர்பேட்டை உதவி காவல் ஆய்வாளராக சுகந்தி (37) என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து காவல் நிலையத்திலிருந்து திருத்தணியில் உள்ள அவரது வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். திருத்தணி-பொதட்டூர்பேட்டை நெடுஞ்சாலை, புச்சிரெட்டிபள்ளி அருகே சென்றபோது, திடீரென சாலையின் குறுக்கே காட்டுப்பன்றி ஒன்று வேகமாக ஓடி வந்து சுகந்தி சென்ற இருசக்கர வாகனத்தின் மீது வேகமாக மோதியது.
இதில், நிலை தடுமாறி சாலையில் விழுந்த எஸ்ஐ சுகந்திக்கு முகம் மற்றும் கை,கால் பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை மீட்டு, திருத்தணியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். திருத்தணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post இருசக்கர வாகனத்தில் சென்றபோது காட்டுப்பன்றி மோதி பெண் எஸ்ஐ படுகாயம் appeared first on Dinakaran.