இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு

1 day ago 4

சாத்தூர் அருகே இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் வெள்ளிக்கிழமை தோறும் அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்படும். அவ்வகையில் இன்று வெள்ளிக்கிழமையை முன்னிட்டு அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. பின்னர் அம்மனுக்கு மஞ்சள், பால், பன்னீர், தேன் பல்வேறு வகையான பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

அதிகாலையிலேயே தென் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தியும், அக்னி சட்டி எடுத்தும், அலகு குத்தியும் வேண்டுதல்களை நிறைவேற்றினர். காலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்தனர்.

சிறப்பு பூஜைகளுக்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் இளங்கோவன் மற்றும் அறங்காவலர் குழு தலைவர் ராமமூர்த்தி தலைமையில் அறங்காவலர் குழுவினர் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

Read Entire Article