இரட்டை இலை சின்னத்தை பழனிசாமி பயன்படுத்த தடை விதிக்க வேண்டும்: தேர்தல் ஆணையத்திடம் புதிய மனு

2 months ago 9

அதிமுக தொடர்பாக மாநகர சிவில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுக்கள் மீது தீர்ப்பு வரும் வரை இரட்டை இலை சின்னத்தை பழனிசாமி பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தில் சூரியமூர்த்தி மனு அளித்துள்ளார்.

அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய இரட்டை தலைமை பதவிகள் உருவாக்கப்பட்டது, கடந்த 2022-ம் ஆண்டு ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள், பொதுக்குழுவில் அவைத் தலைவரை நியமித்தது, அதிமுக பொதுச்செயலாளராக பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டது உள்ளிட்டவற்றுக்கு எதிராக அதிமுக உறுப்பினராக இருந்த திண்டுக்கல்லை சேர்ந்த சூரியமூர்த்தி சென்னை மாநகர சிவில் நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகளை தொடர்ந்துள்ளார். இந்த வழக்குகள் நிலுவையில் உள்ளன.

Read Entire Article