இயந்திர கோளாறு காரணமாக ஏர் இந்தியா விமானம் 7 மணி நேரம் தாமதம்: பயணிகள் அவதி

6 months ago 20

 

சென்னை, நவ.17: சென்னையில் இருந்து நேற்று பகல் 11.55 மணிக்கு, ஏர் இந்தியா பயணிகள் விமானம் சிங்கப்பூருக்கு புறப்பட்டு செல்ல வேண்டும். இந்த விமானம் வழக்கமாக காலை 10.25 மணிக்கு சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்து, மீண்டும் சிங்கப்பூர் புறப்பட்டு செல்லும். ஆனால் இந்த விமானம் இயந்திர கோளாறு காரணமாக, சிங்கப்பூர் விமான நிலையத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டது.

இதனால் சென்னையில் இருந்து பகல் 11.55க்கு, சிங்கப்பூர் புறப்பட வேண்டிய ஏர் இந்தியா பயணிகள் விமானம், சுமார் 7 மணி நேரம் தாமதமாக, நேற்று இரவு 7 மணிக்கு புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த விமானத்தில் 142 பயணிகள், சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்ல இருந்தனர்.

இந்நிலையில், காலை 10 மணிக்கு முன்னதாகவே விமான நிலையம் வந்த பயணிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர். இதனிடையே, ஏர் இந்தியா விமானம் பழுது சரி செய்யப்பட்டு, சுமார் 7:30 மணி நேரம் தாமதமாக, மாலை 5.50 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையம் வந்தது.

பின்னர், பயணிகள் விமானத்தில் ஏற்றப்பட்டு, இரவு 7 மணி நேரத்திற்கு மேல் தாமதமாக இரவு 7.15 மணிக்கு சென்னையில் இருந்து சிங்கப்பூர் புறப்பட்டு சென்றது. இதேபோல் சிங்கப்பூரில் இருந்து காலை 10.25 மணிக்கு வரவேண்டிய ஏர் இந்தியா பயணிகள் விமானம், சுமார் 7:30 மணி நேரம் தாமதமாக மாலை 5.50 மணிக்கு வந்ததால், அந்த விமானத்தில் சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்த 154 பயணிகளும், பெரும் தவிப்புக்கு உள்ளாகினர்.

The post இயந்திர கோளாறு காரணமாக ஏர் இந்தியா விமானம் 7 மணி நேரம் தாமதம்: பயணிகள் அவதி appeared first on Dinakaran.

Read Entire Article