மேட்டூர்: திமுக ஆட்சியில் ஏற்றப்பட்ட அனைத்து வரிகளும் வரும் 2026-ல் எடப்பாடியார் ஆட்சி அமைந்த பிறகு அனைத்தும் குறைக்கப்படும என அதிமுக அமைப்புச் செயலாளர் செம்மலை தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம் மேட்டூர் சட்டமன்றத்திற்கு உட்பட்ட மேச்சேரி, வீரக்கல்புதூர், பி.என்.பட்டி மற்றும் கொளத்தூர் பேரூராட்சிகளில் நிர்வாக சீர்கேட்டை கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் வீரக்கல்புதூர் பேரூராட்சி முன்பு இன்று நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு புறநகர் மாவட்ட செயலாளர் இளங்கோவன் தலைமை வகித்தார். இதில் முன்னாள் அமைச்சரும், கழக அமைப்புச் செயலாளருமான செம்மலை கலந்து கொண்டு பேசியதாவது : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சமீப காலத்தில் தான் ஒரு அரசியல் சாணக்கியர் என்பதை நிரூபித்துக் கொண்டுள்ளார்.