இன்று முதல் 28ம் தேதி வரை வீடு தோறும் தொழுநோய் பரிசோதனை: பொது சுகாதாரத்துறை தகவல்

1 week ago 3

சென்னை: தமிழகத்தில் இன்று முதல் வரும் 28ம் தேதி வரை வீடுதோறும் தொழுநோய் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என பொது சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் முன்கூட்டியே தொழுநோய் நோயாளிகளைக் கண்டறியவும், இந்த நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் பொது சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது. இதன்படி, இன்று முதல் வரும் 28ம் தேதி வரை 133 ஊரக வட்டாரங்கள், 27 நகர்ப்புறத்திலும் இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இந்த பரிசோதனையின் போது, தொழுநோய் சந்தேகத்திற்கிடமான நோயாளிகள் வீடுதோறும் அடையாளம் காணப்பட்டு பொருத்தமான முறையில் சிகிச்சை அளிக்கப்படும்.

உணர்வை இழக்கும் ஹைபோ நிறமி தோல் திட்டுகள் உள்ளவர்கள், கண்களை மூட இயலாமை, காது மடல் தடிமனாவது, கைகள் மற்றும் கால்களின் பலவீனம், விரல்கள் மற்றும் கால் விரல்களின் நகங்கள், கைகளிலும் கால்களிலும் தசை வீணாவது, கை, மணிக்கட்டு மற்றும் கால் துளி மூலம் பொருட்களைப் பிடிக்க இயலாமை, கைகள் மற்றும் கால்களின் உணர்வின்மை மற்றும் கைகள் மற்றும் கால்களில் குணமடையாத புண்கள் உள்ளவர்களுக்கு ஆரம்ப சுகாதார மையங்களில் சிகிச்சை அளிக்கப்படும்.

பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு, தங்கள் வீட்டுக்கு வரும் சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு ஒத்துழைத்து, தொழுநோய்க்கான பரிசோதனைக்கு தானாக முன்வர வேண்டும். தொழுநோயைத் தடுப்பதற்கான போஸ்ட் எக்ஸ்போஷர் புரோபிலாக்சிஸ் தேவைப்படும் பொதுமக்களுக்கு வழங்கப்படும். அனைத்து பள்ளிக் குழந்தைகளும் பொது சுகாதாரக் குழுவால் தொழுநோய்க்கு தங்கள் பள்ளிகளில் பரிசோதிக்கப்படுவார் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

The post இன்று முதல் 28ம் தேதி வரை வீடு தோறும் தொழுநோய் பரிசோதனை: பொது சுகாதாரத்துறை தகவல் appeared first on Dinakaran.

Read Entire Article