
ஜகார்த்தா,
இந்தோனேசியாவின் வடக்கு சுமத்திரா தீவு அருகே கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 5.7 ஆக பதிவானதாக, நிலநடுக்கத்திற்கான தேசிய ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இன்று அதிகாலை 2:48 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கமானது சினாபாங் நகருக்கு தென்கிழக்கே 62 கி.மீ தொலைவில், 30 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் கடுமையான சேதம் அல்லது உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை. மேலும், சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை.