
ஜகர்த்தா,
இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டி தலைநகர் ஜகர்த்தாவில் நடந்து வருகிறது. இதில் இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவின் 2-வது சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் சிராக் ஷெட்டி-சாத்விக் ரங்கி ரெட்டி ஜோடி, டென்மார்க்கின் ராஸ்மஸ் க்ஜோர்-பிரடெரிக் சோகார்ட் ஜோடியுடன் மோதியது.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடி ஆதிக்கம் செலுத்திய இந்த போட்டியில் முதல் செட்டை இழந்த இந்திய ஜோடி அடுத்த இரண்டு செட்டை கைப்பற்றியது. இதனால் 16-21, 21-18, 22-20 என்ற செட் கணக்கில் இந்திய ஜோடி வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது.