“இந்துக்களின் சமய நம்பிக்கைக்கு வலு சேர்க்கும் பண்டிகை தீபாவளி” - இந்து முன்னணி

7 months ago 24

சென்னை: அனைத்து தரப்பு மக்களின் வாழ்விலும் வளம் சேர்க்கும் நமது தீபாவளி திருநாள், இந்துக்களின் சமய நம்பிக்கைக்கு வலு சேர்க்கிறது என்று இந்து முன்னணி அமைப்பின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி சுப்பிரமணியம், தான் வெளியிட்டுள்ள தீபாவளி வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தீபாவளி திருநாளில் இறைவன் அனைவருக்கும் எல்லா வளங்களையும், நலங்களையும் வழங்கிட பிரார்த்தனை செய்து வாழ்த்துகிறோம். தீபாவளித் திருநாள் சுமார் 300 வகையான தொழில்களில் ஈடுபட்டுள்ள பல லட்சம் தொழிலாளர்களின் குடும்பங்களை வளம்பெற வைக்கும் உன்னத பண்டிகை.

Read Entire Article