‘இந்தியில் மத்திய அரசின் திட்டப் பெயர்கள்’ - ஆளுநர் முன்பாக முதல்வர் ரங்கசாமி காட்டம்

8 months ago 48

புதுச்சேரி: மத்திய அரசு திட்டங்களின் பெயர்கள் இந்தியில் இருப்பதால் எனக்கும், மக்களுக்கும் தெரியவில்லை என ஆளுநர் முன்பாக புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி காட்டமாக தெரிவித்தார். மேலும் அவர், பிரதமர் அறிவித்த திட்டங்களை தமிழில் தர வேண்டும் என்று அனைத்துத் துறை அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டார்.

புதுச்சேரி அரசு உள்ளாட்சித்துறை மற்றும் நகராட்சிகளின் சார்பில் ஸ்வச்தா ஹி சேவா (தூய்மையே சேவை) இருவாரப்பணி நிறைவு விழா இன்று நடந்தது. இவ்விழாவில் துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி பங்கேற்று சைக்கிள் பேரணி, மாணவ - மாணவியர் ஓட்டம், உழவர்சந்தை தூய்மைப்பணி உள்ளிட்டவற்றை தொடங்கி வைத்தனர்.

Read Entire Article