இந்தியாவில் முதலில் ஆரம்பிக்கப்பட்ட திரூர் கூட்டுறவு சங்க அருங்காட்சியகம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்தார்

4 hours ago 3

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த ஆண்டார்குப்பத்தில் நேற்று அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு முடிவுற்ற பணிகள் மற்றும் நடைபெறும் பணிகளை துவக்கிவைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த விழாவில், இந்தியாவிலேயே முதன்முறையாக திருவள்ளூர் மாவட்டம், திரூர் கிராமத்தில் கடந்த 30-9-1904ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட கூட்டுறவு சங்கத்தின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த அருங்காட்சியகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்து பார்வையிட்டார்.

பின்னர் அருங்காட்சியகம் பற்றிய விவரம் கேட்டு அறிந்ததுடன் பாராட்டுக்களை தெரிவித்தார். விழாவில் கூட்டுறவு துறை சார்பில், கலைஞர் கனவு இல்ல திட்ட கடனுதவி பயனாளி முருகன் உள்பட 3,228 பயனாளிகளுக்கு ரூ.35.48 கோடி அளவிலான கடன் உதவிகளை வழங்கினார். அப்போது அமைச்சர் ஆவடி சா.மு.நாசர், கலெக்டர் மு.பிரதாப், கூட்டுறவு துறை சார்பில் மண்டல இணைப்பதிவாளர் தி.சண்முகவள்ளி உள்பட பலர் இருந்தனர்.

The post இந்தியாவில் முதலில் ஆரம்பிக்கப்பட்ட திரூர் கூட்டுறவு சங்க அருங்காட்சியகம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்தார் appeared first on Dinakaran.

Read Entire Article