இந்தியா-பாகிஸ்தான் போர் எதிரொலி: சென்னையில் இருந்து சிஐஎஸ்எப் வீரர்கள் 276 பேர் காஷ்மீர் விரைவு

7 hours ago 2

தண்டையார்பேட்டை: இந்தியா-பாகிஸ்தான் போர் எதிரொலி காரணமாக, சென்னையில் பணி யாற்றிவரும் மத்திய தொழில் பாதுகாப்புபடை வீரர்கள் 276 பேர் ரயில் மூலம் காஷ்மீர் விரைந்துள்ளனர். காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து இந்தியா, பாகிஸ்தான் மீது ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் தாக்குதல் நடத்தியது.

இந்த தாக்குதலில் தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டு 70 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்நிலையில், இந்தியாவில் உள்ள முக்கிய எல்லை மாநிலங்கள் மற்றும் கடலோர பகுதிகள் என 300 இடங்களில் போர் பாதுகாப்பு ஒத்திகை நடந்து வருகிறது. பாகிஸ்தான் மீது இந்தியா தொடர்ந்து ராணுவ தாக்குதல் நடத்தி வருகிறது.

இதனால் காஷ்மீர், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு போர் பதற்றத்துடன் காணப்படுகிறது. இந்தநிலையில், சென்னை சுற்றியுள்ள துறைமுகம், சிபிசிஎல், சென்னை உயர்நீதிமன்றம் உள்ளிட்ட பகுதிகளில் பணிபுரிந்து வரும் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் உடனடியாக போர் நடைபெறும் ஜம்மு காஷ்மீர் பகுதிக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டது.

அதன்படி 3 கம்பெனிகள் ஒரு கம்பெனிக்கு 92 பேர் என 3 கம்பெனிக்கு 276 வீரர்கள் ரயில் மூலம் இன்று புறப்பட்டு செல்கின்றனர். போர் பதற்றம் அதிகமானால் இன்னும் தமிழக முழுவதும் பணி புரியும் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் அனுப்பி வைக்கப்படுவார்கள் என மத்திய தொழில் பாதுகாப்பு படை கமாண்டர் தெரிவித்துள்ளார்.

The post இந்தியா-பாகிஸ்தான் போர் எதிரொலி: சென்னையில் இருந்து சிஐஎஸ்எப் வீரர்கள் 276 பேர் காஷ்மீர் விரைவு appeared first on Dinakaran.

Read Entire Article