
மும்பை,
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதன்படி இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி லீட்சில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார்.
இதையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் முதல் இன்னிங்சில் 85 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 359 ரன்கள் குவித்திருந்தது. கேப்டன் சுப்மன் கில் 127 ரன்களுடனும், ரிஷப் பண்ட் 65 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். ஜெய்ஸ்வால் 101 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இந்த சூழலில் 2-வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது. சுப்மன் கில், ரிஷப் பண்ட் தொடர்ந்து பேட்டிங் செய்து வருகின்றனர்.
முன்னதாக இந்த தொடர் குறித்தும், இந்த தொடரில் வெற்றி பெறப்போகும் அணி குறித்தும் பல முன்னாள் வீரர்கள் தங்களது கணிப்பிடை வெளியிட்டு வருகின்றனர். அந்த வரிசையில் இந்திய முன்னாள் ஜாம்பவானான சச்சின் தெண்டுல்கர் தனது கணிப்பினை வெளியிட்டுள்ளார்.
அவரது கணிப்பின் படி, சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி 3-1 என்ற கணக்கில் வெற்றி பெறும் என்று கணித்துள்ளார்.