ஐ.சி.சி. விதிமுறையை மீறிய சுப்மன் கில்.. தண்டனை கிடைக்குமா..?

5 hours ago 3

லீட்ஸ்,

இங்கிலாந்துக்கு சென்றுள்ள சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 'ஆண்டர்சன்- தெண்டுல்கர்' கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதன்படி இந்தியா- இங்கிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி லீட்சில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதல் இன்னிங்சை விளையாடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 113 ஓவர்களில் 471 ரன்கள் குவித்த நிலையில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக கேப்டன் சுப்மன் கில் 147 ரன்களும், ரிஷப் பண்ட் 134 ரன்களும், ஜெய்ஸ்வால் 101 ரன்களும் அடித்தனர். இங்கிலாந்து தரப்பில் பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஜோஷ் டங் தலா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதனையடுத்து இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கி விளையாடி வருகிறது.

இந்த ஆட்டத்தில் இந்திய அணியின் கேப்டனான சுப்மன் கில் கருப்பு நிற சாக்ஸ் அணிந்து விளையாடினார். ஐ.சி.சி. விதிப்படி, டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் வீரர்கள் வெள்ளை, கிரீம் அல்லது வெளிர் சாம்பல் ஆகிய நிறங்களில் மட்டுமே காலுறைகளை அணிந்திருக்க வேண்டும்.

தற்போது அந்த விதிமுறையை சுப்மன் கில் மிறீயுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அவருக்கு ஐ.சி.சி. தண்டனை விதிக்கலாம் என்று கூறப்படுகிறது. 

Read Entire Article