இந்திய விமானப் படை தினத்தை முன்னிட்டு மெரினாவில் 72 விமானங்கள் சாகசம்

3 hours ago 4

சென்னை: இந்திய விமானப் படை தினத்தை முன்னிட்டு, சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற பிரம்மாண்டவான் சாகச நிகழ்ச்சியில் 72 விமானங்கள், பார்வையாளர்களை பரவசத்தில் ஆழ்த்தின.

இந்திய விமானப் படையின் 92 ஆண்டு நிறைவை கொண்டாடும் விதமாக, சென்னையில் மிக பிரம்மாண்டமான வான் சாகச நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. மெரினா கடற்கரையில் காலை 11 மணிக்கு தொடங்கிய நிகழ்ச்சி மதியம் 1 மணிவரை நடந்தது. இதையொட்டி, காலை 8 மணி முதலே மெரினாவில் மக்கள் குவியத் தொடங்கினர். சென்னை மாநகர பேருந்துகள், புறநகர் மின்சார ரயில்கள், பறக்கும் ரயில் (எம்ஆர்டிஎஸ்), மெட்ரோ ரயில்களில் கூட்டம் அலைமோதியது. மெரினா பகுதியில் கட்டுக்கடங்காத கூட்டம் காணப்பட்டது.

Read Entire Article