இந்திய ராணுவம் தாக்குதல்: புதுச்சேரி முதல்வர் பாராட்டு

14 hours ago 2

புதுச்சேரி: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாது: பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இயங்கிவந்த பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்திய ராணுவம் “ஆபரேஷன் சிந்தூர்” என்கிற பெயரில் தாக்குதலை வெற்றிகரமாக நடத்தியதன் மூலம் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு இந்திய ராணுவம் தகுந்த பதிலடி கொடுத்துள்ளது.

நாட்டின் அமைதியை சீர்குலைக்க முற்படும் பயங்கரவாதத்திற்கு எதிரான இந்த நடவடிக்கையை வெற்றிகரமாக மேற்கொண்டதற்காக பிரதமர் மோடிக்கும் இந்திய ராணுவத்திற்கும் எனது சார்பிலும் புதுச்சேரி மக்கள் சார்பிலும் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். பயங்கரவாதத்திற்கு எதிராகவும் நாட்டின் பாதுகாப்பிற்காகவும் இந்திய அரசு மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் புதுச்சேரி அரசு என்றும் துணைநிற்கும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post இந்திய ராணுவம் தாக்குதல்: புதுச்சேரி முதல்வர் பாராட்டு appeared first on Dinakaran.

Read Entire Article